செப்டம்பர் மாத ராசி பலன்கள் – துலாம்!!

401

thula“பொறுமை தராசு’’ என்பதற்கேற்ப எதிலும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் பொறுமைய கடைப்பிடிப்பவர்கள் நீங்கள். தற்போது ராசியில் சனி, ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, பாக்கிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், விரயஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் ராசியில் இருக்கிறது. இருந்தாலும் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் என்பது கிடையாது என்ற சிறப்பு பலன்படி உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.

ராசியில் ஏழரைச் சனி இருந்தாலும் குரு பார்ப்பதாலும் முன்னேற்றப் பலன்கள் உண்டு. இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் சரும சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்து வந்த பிரச்னைகள் மறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு, கேட்ட இடமாற்றம் உங்களை வந்து சேரும்.

வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. பெண்களுக்கு இந்த காலகட்டம் நன்மை, தீமைகள் என இரண்டுமே ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் பலன் நிச்சயம். அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம் : நவகிரகங்களை வலம் வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் ஸ்ரீகைலாஸவாஸினே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : நவகிரகங்களுக்கு நெய் விளக்கு ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 24, 25 ஆகிய திகதிகளில் பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : திங்கள், செவ்வாய், வெள்ளி.
தேய்பிறை  : ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.